தீவிரவாதத்தை ஆதரித்த குற்றச்சாட்டுக்காக மேலும் இருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமை பாதுகாத்தல் தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முகரியாவ பகுதியில் கைதான 47 வயதான மேற்கண்ட நபர் 2018 ஆம் ஆண்டில் சஹ்ரான் உட்பட ஐந்து பேரை கவனித்து வந்தாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள 35 வயதுடைய கைதி ஒருவரும் குறித்த குற்றச்சாடடுக்காக நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார். -வீரகேசரி பத்திரிகை-