இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரும் மற்றும் சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த கைதி ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.,
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2809 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை 2296 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போதைய நிலையில் 502 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Akurana Today All Tamil News in One Place