இலங்கையில் 42 ஆவது கொவிட் மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாணந்துரை பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்திருந்த நிலையில் பிரேத பரிசோதனையின் போது அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொவிட் 19 தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பில் இவர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Akurana Today All Tamil News in One Place