தன்னைக் கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன, குற்றப் புலனாய்வு திணைக்களப் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.பீ ரணவிங்க, விசாரணை அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் காமினி உட்பட 7 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
Akurana Today All Tamil News in One Place