சப்ரகமுவ மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான உத்தரவு பத்திர விநியோகமானது ஒக்டோபர் 29 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கொவிட்-19 நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண தலைமை செயலாளர் ரஞ்சனி ஜெயகொடி தெரிவித்தார்.
இந்த காலகட்டத்தில் வருமான உத்தரவு பத்திரங்களின் காலாவதிக்கு வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.
வீரகேசரி பத்திரிகை
Akurana Today All Tamil News in One Place