இலங்கையின் புதிய நாடாளுமன்றத்தில் விசித்திரம் – தந்தை – மகன்களாக 3 குடும்பங்கள்

இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று தந்தை – மகன் ஜோடிகள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

முதலாவது ஜோடியாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

அத்துடன் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் ஷஷிந்திர ராஜபக்ஷ ஆகியோரும், முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் அவரது மகன் பிரமித பண்டார தென்னகோன் ஆகியோரே தெரிவாகியுள்ளனர்.

கடந்த நாடாளுமன்றத்தில் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகன் சத்துர சேனாரத்ன ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டனர்.

எனினும் சத்துர சேனாரத்ன இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter