மத்திய கிழக்கு நாடுகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள சுமார் 10,000 இலங்கையர்கள் தொழில் வாய்ப்பை இழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்ப எதிர்ப்பார்ப்பவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடக பேச்சாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.
சுமார் 40,000 இலங்கை தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்காக கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Akurana Today All Tamil News in One Place