ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் போது 6,000 வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
கொழும்பு பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் 6,000 வாள் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து முறையான விசாரணையை நடத்த சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு நீதிமன்றத்தில் உத்தரவு கோரி ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இதன்போதே இந்த விடயம் நீதின்றுக்கு அறிவிக்கப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அர்ஜூன் ஒபேசேகர மற்றும் நீதிபதி மாயாதுன்ன கொரயா ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழு, இந்த மனு மீதான விசாரணையை மே 6 வரை ஒத்திவைத்தது.
Akurana Today All Tamil News in One Place