கொரோனா பூதவுடல்கள் குளிரூட்டிகளில் பாதுகாப்பு -தீர்மானம் வந்ததும் நல்லடக்கம்

தீர்மானம் வந்ததும் நல்லடக்கம் வெளி ஆஸ்பத்திரிகளுக்கும் குளிரூட்டிகள் எரிப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்

கொரோனா தொற்று காரணமாக உயிர் இழப்பவர்களது பூத உடல்களை எரிப்பதற்குப் பதிலாக நல்லடக்கம் செய்வதற்கு பரிசீலித்துவரும் அரசு, கொழும்பைப் போன்று நாட்டின் வெளி பிரதேசங்களிலும் இறக்கும் முஸ்லிம்களது ஜனாஸாக்களை தீர்மானம் வரும் வரை குளிரூட்டிகளில வைத்து பாதுகாப்பதற்குத்‌ தேவையான ஏற்பாடுகளைச்‌ செய்வதற்காக அவ்வாறான
குளிரூட்டல்‌ வசதியில்லாத. வைத்தியசாலைகளுக்கு குளிரூட்டல்‌ வசதிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

பிரதமர்‌ மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்‌ அண்மையில்‌ நடைபெற்ற கூட்டத்தில்‌ எடுத்த தீர்மானப்படி ஜனாஸாக்களை
எழிப்பதற்குப்‌ பதிலாக அடக்கம்‌ செய்வதற்குரிய ஏற்பாடுகளைச்‌ செய்வது குறித்து சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

இந்தப்‌ பின்னணியிலே கொழும்பில்‌ உயிரிழக்கும்‌ முஸ்லிம்களது ஜனாஸாக்கள்‌ தற்போது குளிரட்டிகளில்‌ பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதே ஏற்பாட்டை வெளியூர்களிலும்‌ செய்வதற்குத்‌ தேவையான வசதிகளைச்‌ செய்து கொடுக்குமாறு சுகாதார சேவைகள்‌ பணிப்பாளர்‌ நாயகம்‌ உத்தரவிட்டுள்ளார்‌.

இதன்படி குளிரூட்டிகள்‌ தேவையாள வைத்தியசாலைகளுக்கு குளிரூட்டிகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று நோய்க்குப்‌ பொறுப்பான அமைச்சர்‌ டாக்டர்‌ சுதர்சன பெர்னாண்டோ புள்ளே கடந்த சில தினங்களாக பல இத்துறை நிபுணர்களைச்‌ சந்தித்து அடக்கம்‌ செய்வதனால்‌ பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றி கருத்துக்களை
கேட்டறிந்துள்ளார்‌.

இது தொடர்பாக அவர்‌ தயாரித்த அறிக்கையை ஐனாதிபதியிடம்‌ கையளித்திருப்பதாகத்‌ தெரிய வருகிறது.

சுற்றுநிரூபம்‌ ஏற்கனவே கொழமும்புக்கு அனுப்பப்பட்டிருந்தபோதும்‌ வெளியூர்களுக்கு அனுப்பப்படாததன்‌ காரணமாக கடந்த சில தினங்களில்‌ மரணித்த முஸ்லிம்கள்‌ சிலர்‌ எரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்‌ பின்னணியில்‌ இது குறித்து அரசாங்கத்தின்‌ கவனத்திற்கு எடுத்துக்‌ கூறப்பட்ட பின்பே சுகாதார சேவைகள்‌ பணிப்பாளர்‌
நாயகம்‌ வெளியூர்‌ வைத்தியசாலைகளுக்கு குளிரூட்டிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்‌.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter