மதரசாக்களை மீள் திறத்தல்: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தீர்மானம்.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளைக்  கருத்திற் கொண்டு, அரபுக் கல்லூரிகள் திறப்பது தொடர்பாக அரபுக் கல்லூரி பிரதிநிதிகளுடன் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இன்று (21.11.2020) மாலை 8.00 மணிக்கு நடாத்திய (zoom Meeting) கலந்துரையாடலில் பின்வருமாறு முடிவு எடுக்கப்பட்டது.

அரசாங்கப் பாடசாலைகள் ஆரம்பித்ததன் பின்னர் நிலைமைகளை ஓரிரு வாரங்களுக்கு அவதானித்த பின்னர் மத்ரசாக்களை திறப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும்.

எனவே, எந்தவொரு அரபுக் கல்லூரியும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும்.

ஏ.பி.எம். அஷ்ரப்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter