கண்டி நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்ய குழு நியமனம்

கண்டியின் சில பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட சிறியளவிலான நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்ய புவியியலாளர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 9.27 அளவில் கண்டியின் ஹாரகம, அனுரக, திகன ஆகிய பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது 30 செக்கன்கள் வரை நீடித்தது.

இந்த அதிர்வு பல்லேகலையில் அமைந்துள்ள நில நடுக்க கண்காணிப்பு மையத்தில் பதிவாகியுள்ளது. இது ரிச்டரில் இரண்டு அளவீடுகளைப் பதிவு செய்திருந்ததாக புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகம் நேற்றைய தினம் அறிவித்திருந்தது.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter