கொரோனாவால் உயிரிழந்தவர் உடல்களை, அடக்கம்செய்யும் முடிவை அமைச்சரவை எடுக்க முடியாது – ஹெகெலிய

அமைச்சரவையால் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்த தீர்மானத்தை, எடுக்க முடியாது என அமைச்சர் ஹெகெலிய ரம்புக்வெல கண்டியில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை, தகனம் செய்யவேண்டுமா அடக்கம் செய்யவேண்டுமா என்பது குறித்து தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரம், அமைச்சரவைக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த முடிவை சுகாதார அதிகாரிகளே எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் இந்த விடயம் குறித்து பல தடவை ஆராயப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter