அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

இன்று நள்ளிரவு (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வௌியிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 1 கிலோ சம்பா மற்றும் பச்சை அரிசி சம்பாவுக்கான அதிகபட்ச சில்லரை விலை 94 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டரிசி ஒரு கிலோ 92 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பச்சை அரிசி ஒரு கிலோவின் அதிகபட்ச சில்லறை விலை 89 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. Ada-Derana

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter