கண்டி மாவட்டத்தில் எந்தவொரு தெஹீத் ஜமாஅத் பள்ளிவாசலும் பதிவு செய்யப்படவில்லை – ஹலீம்

கண்டி மாவட்டத்தில் தெஹீத் ஜமாஅத் பள்ளிவாசலும் பதிவு செய்யப்படவில்லை என்று தபால் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.

வக்பு சபையின் ஊடாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பள்ளி வாசல்களை பதிவு செய்வதாகவும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் அப்துல் ஹலீம் இதனை தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் தீவிரவாதம் கிடையாதென விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். சிங்கள, பௌத்த மக்களுக்கு நியாயத்தை வழங்கி ஏனைய மக்களுக்கும் நியாயத்தை நிலைநாட்டுவது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையாகுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.(அ)

http://www.dailyceylon.com/184890/

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter