நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கட்டாரிலிருந்து நாடுதிரும்பிய மூவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2668 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 656 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 150 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 2,001 பேர் குணமடைந்தும், 11 பேர் உயிரிழந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Akurana Today All Tamil News in One Place