சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாத பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து

பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தும் போது சுகாதார ஆலோசனைகளுக்கமைய செயற்படுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முகக்கவசமில்லாத பயணிகளை பஸ்களில் ஏற்ற வேண்டாம் என, அனைத்து பஸ் ஊழியர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றாத பஸ்களின் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, பஸ்களில் கிருமி ஒழிப்பினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரண்டா குறிப்பிட்டுள்ளார்.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter