கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் ஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கன் விமான நிலைய விசேட விமானத்தின் ஊடாக டோக்கியோ நரிடா விமான நிலையத்தில் இருந்து இவர்கள் அனைவரும் வருகைத் தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு வருகை தந்துள்ள 261 பேருக்கும் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Akurana Today All Tamil News in One Place
