நேற்றைய தினம் இலங்கையில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டாரிலிருந்து நாடுதிரும்பிய 22 பேருக்கும் குவைட்டிலிருந்து நாடுதிரும்பிய 2 பேருக்கும் இந்தியாவிலிருந்து நாடுதிரும்பிய ஒருவருக்கும் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடுதிரும்பிய ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,195 ஆக அதிகரித்துள்ளது.மேலும், 200 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,983 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்று சந்தேகத்தில், 39 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Akurana Today All Tamil News in One Place