மஞ்சளுக்கு கிராக்கி – இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பாரிய விலைக்கு விற்பனை

இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் மஞ்சள் கிலோ கிராம் ஒன்றின் விலை அதிகரித்துள்ளது.

முதல் முறையாக மஞ்சள் தூள் ஒரு கிலோ கிராமின் விலை 3000 ரூபாயை கடந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவ ஆரம்பித்து முதலே மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிறுமி நாசினியாக பலர் மஞ்சள் தூளை பயன்படுத்தி வருகின்றமையினால் இவ்வாறு மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இரண்டு மாதங்களாக மஞ்சளுக்காக பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter