கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த நடவடிக்கை இடை நிறுத்தப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களில் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து குறித்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டாரில் தங்கியிருந்த 273 இலங்கையர்களை நாளை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள 273 பேரும் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் நாளை நாட்டக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
இலங்கை வர தயாரான நிலையில் இருந்த 5 குழந்தைகள் உள்ளிட்ட 273 பேரே நேற்று இறுதி நேரத்தில் திடீரென இடைநிறுத்தப்பட்டவர்கள் ஆவர். அவர்களே இவ்வாறு இன்றிரவு அங்கிருந்து இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Akurana Today All Tamil News in One Place
