202 பில்லியன் ரூபாவை அச்சிடுவதற்கு இலங்கை மத்திய வங்கி டிசெம்பர் (29) நடவடிக்கை எடுத்திருந்தது.
கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதியின் பின்னர் பணம் அச்சிடப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 825 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கி 48.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான முறிகளை விநியோகிப்பதற்கு டிசெம்பர் 29ஆம் திகதியன்று நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் அதில் 33.5 பில்லியன் பெறுமதியான முறிகளையே விற்பனை செய்ய முடிந்துள்ளது.
“வட்டி வீதம் மற்றும் நாணய மாற்று விகிதத்தை தொடர்ந்தும் கட்டுப்படுத்துவதன் மூலம் நெருக்கடி மேலும் தீவிரமடைந்து வருகிறது” என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி டப்ளியு. ஏ.விஜேவர்தன தெரிவித்துள்ளார். -தமிழ் மிற்றோர்– (2022-01-01 00:37:51)
Akurana Today All Tamil News in One Place