கோட்டாவுக்கு இயலாவிடின் புதிய ஜனாதிபதி வருவார் – ஞானசார தேரர்‌

ஒரே நாடு, ஓரே சட்டத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால்‌ முடியாது போகுமாயின்‌ ஜனாதிபதி ஒருவரை எதிர்காலத்தில்‌ உருவாக்கியேனும்‌ அச்சட்டத்தை நிறைவேற்றப்போவதாக, ஓரே நாடு- ஒரே சட்டம்‌’ ஜனாதிபதி செயலணியின்‌ தலைவர்‌ ஞானசார தேரர்‌ தெரிவித்துள்ளார்‌.

இது தொடர்பில்‌ மேலும்‌ தெரிவித்துள்ள அவர்‌, நாட்டின்‌ முன்னாள்‌ தலைவர்கள்‌ எவரும்‌ ‘ஒரே ்‌ நாடு-ஒரே சட்டம்‌’ தொடர்பில்‌ இதற்கு முன்னர்‌ சிந்தித்ததும்‌ கிடையாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டின்‌ எதிர்காலத்துக்காக சில நல்ல விடயங்களை செய்து வருகிறார்‌ என்றார்‌.

ஜனாதிபதியின்‌ இவ்வாறான திட்டங்கள்‌ மக்களுக்கு தெரியுமா என்பதில்‌ பிரச்சினைகள்‌ உள்ளன. எவ்வாறாயினும்‌ நாட்டு மக்களிடத்தில்‌ தற்போது பட்டணி, சமையல்‌ எரிவாயு மற்றும்‌ உரம்‌ உள்ளிட்ட பிரச்சினைகளே காணப்படுகின்றன என்றார்‌.

ஒரே நாடு- ஒரே சட்டம்‌” எனும்‌ சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால்‌ முடியாவிட்டாலும்‌ எதிர்காலத்தில்‌ ஐனாதிபதி ஒருவரை உருவாக்கியேனும்‌ ஒரே நாடு, ஒரே சட்டத்தை சட்டமாக்குவோம்‌ என்றார்‌.

மேலும்‌, ‘ஒரே நாடு, ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உள்ளது. எனவே இதனை ஜனாதிபதியால்‌ வெற்றிகொள்ள முடியும்‌. அதற்கான அதிகாரம்‌ ஜனாதிபதியிடம்‌ இருக்கிறது. எனவே, இதனை ஐனாதிபதி செய்து முடிப்பார்‌ என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்‌.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter