மத்தளையில் நெதர்லாந்து விமானம், காலியில் நெதர்லாந்து கப்பல்

நெதர்லாந்து நாட்டுக்கு சொந்தமான விமானம் ஒன்று 230 பணியாளர்களுடன் இன்று மத்தளை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

தற்போது காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நெதர்லாந்துக்கு சொந்தமான கப்பலொன்றின் பணியாளர்களை அழைத்துக்கொண்டே இந்த விமானம் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. மனிதாபிமான செயற்பாடாக குறித்த விமானம் மத்தளை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதோடு அதில் பயணித்த அனைவரும் சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றியுள்ளனர்.

தற்போது காலி துறைமுகத்தில் உள்ள குறித்த கப்பலில் பணியாற்றும் 53 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு இன்றிரவு 8.30 மணிக்கு குறித்த விமானம் நெதர்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளது.

இந்நிலையில் விமானத்தில் அழைத்துவரப்பட்ட பணியாளர்களை தற்போது மேற்படி கப்பலுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter