நடத்துனர்களின்றி பேருந்து போக்குவரத்தை முன்னெடுக்க யோசனை முன்வைப்பு

பேருந்து நடத்துனர் அல்லது சாரதி உதவியாளர்களின்றி பயணிகள் போக்குவரத்திற்காகப் பேருந்துகளைப் பயன்படுத்தக்கூடிய வகையில் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தைத் திருத்துமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் போக்குவரத்து அமைச்சுக்கு யோசனை முன்வைத்துள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 காரணமாகப் பேருந்து தொழிற்துறையின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதோடு பணியாளர்களின் வெற்றிடம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைக் கருத்திற்கொண்டு குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஹிரு செய்திகள் hirunews.lk

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter