விரைவில் – மொபைல் எண்களை மாற்றாமல் சேவை வழங்குநர்களைத் தேர்ந்தெடுக்க.

தொலைபேசி இலக்கத்தை மாற்றம் செய்யாமல் தொலைதொடர்பு சேவை வழங்குனரை மாற்றுவதற்கான வாய்ப்பை பாவனையாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமையின் படி ஒரு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட சிம் இணைப்பு இலக்கம் அதே நிறுவனத்திலே பதியப்பட்டு இருக்கும், பாவனையாளர்கள் வேறு நிறுவன சிம் ஒன்றினை வாங்கும் போது வேறு இலக்கத்தினையே பெற்றுக்கொள்வார்கள்.

உதாரணமாக நீங்கள் டயலாக் நிறுவனத்தில் இருந்து எயர்டேல் நிருவனதிற்கோ அல்லது ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து டயலாக் நிறுவனத்திற்கு மாறுவதாக இருந்தால் உங்கள் பாவனையில் இருக்கும் இலக்கத்தினை மாற்ற வேண்டியதில்லை. 

பாவனையாளர்களின் தேவையின் அடிப்படையில் தொலைபேசியில் பயன்படுத்தும் சிம் அட்டையை மாற்றம் செய்யாமல் தொலைதொடர்பு சேவை வழங்குனரை மாற்றம் செய்வதற்காக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter