நாட்டில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடுதிரும்பிய இருவருக்கும், சென்னையிலிருந்து நாடு திரும்பிய இருவருக்கும், அமெரிக்காவிலிருந்து நாடுதிரும்பிய ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,947 ஆக அதகரித்துள்ளதுடன் இன்றையதினம் இதுவரை ஆறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான 138 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள 09 வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, 65 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்தும் 2,798 குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Akurana Today All Tamil News in One Place