நாட்டில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றையதினம் வியாழக்கிழமை சென்னையில் இருந்து நாடு திரும்பிய 16 பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை, 2,918 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 142 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள 09 வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, 97 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்தும் 2,765 பேர் குணமடைந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீரகேசரி பத்திரிகை
Akurana Today All Tamil News in One Place