ஜப்பானில் விரைவில் அவரச நிலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானிய ஊடகங்கள் அளித்த தகவலின்படி, வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையிலும் உறுதிப்படுத்தப்படாத எண்ணிக்கையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று அவசர நிலை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இன்றே எந்த அறிவிப்பும் அமல்படுத்தப்படாது என்றும் கருதப்படுகிறது.
டோக்கியோ மற்றும் ஒசாகா போன்ற பெரிய நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜப்பான் நாடு முழுவதும் பரவலாக ஒரே விதமான கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என்றும் கூறப்படுகிறது.
ஆனால் சீனா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளைப் போல ஜப்பான் பிரதமரால் நாட்டை முடக்கும் நடவடிக்கையை அமல்படுத்த முடியாது. இதுவரை ஜப்பானில் 3600 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர், 85 பேர் உயிரிழந்துள்ளனர். டோக்கியோவில் மட்டுமே 1000திற்கு அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Akurana Today All Tamil News in One Place