அரச ஊழியர்களின் சம்பளம் குறையாது

அரசு துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் இன்று (24) அறிவித்துள்ளது.

அரசாங்கத்  தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே  அமைச்சரவையின் இணை பேச்சாளர்களில் ஒருவரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட்-19 நிதிக்கு நன்கொடையாக அளிக்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது அரசு துறையில் ஊதியக் குறைப்புக்கான முயற்சியல்ல என்றார்.   -தமிழ் மிற்றோர்

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter