கிடுகிடுவென உயர்ந்த கொரோனா மரணங்கள்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 170 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

102 ஆண்களும் 69 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 130 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 40 பேர் மரணித்துள்ளனர்.  

அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  6,604 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் மேலும்  2,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 368,011 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,188 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 316,528 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன்  44,720 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். -தமிழ் மிற்றோர்-

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter