ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி,

இலங்கையில் மேலும் 4 கொரோனா நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக
சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த நான்கு பேருக்கே இவ்வாறு கொவிட் 19 வைரஸ்
தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2875 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் 29 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ள நிலையில் இதுவரையில் 2622 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் 242 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter