இன்று முழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டம்.

நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் கிழமை காலை 6 மணிவரை அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை காவல் துறை ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று முற்பகல் 9 மணிமுதல் தற்காலிகமாக காவல் துறை ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளதோடு மதியம் 12 மணிமுதல் மீண்டும் அமுலாகும் என காவல் துறைமா அதிபர் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


    Check Also

    10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

    உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

    Free Visitor Counters Flag Counter