குவைத்​தில் இருந்து 8 லட்சம் இந்தியர்கள் வெளி​யேற்​றம்?

குவைத்​தில் வெளி​நாட்​டுத் தொழி​லா​ளர்​க​ளின் எண்​ணிக்​கையை படிப்​ப​டி​யா​கக் குறைக்க வகை செய்​யும் குடி​யேற்ற மசோ​தாவுக்கு பாரா​ளு​மன்​றக் குழு ஒப்​பு​தல் அளித்​துள்​ளது. இதை​ அடுத்து 8 இலட்சம் இந்​தி​யர்​கள் அந்​நாட்​டி​ல் இ​ருந்து வெளி​யேற்​றப்​ப​டும் நிலை ஏற்​பட்​டுள்​ள​தா​கத் தக​வல்​கள் தெரி​விக்​கின்​றன.

குவைத்​தின் தற்​போ​தைய மக்​கள்​தொகை 43 இலட்சம். இதில் குவைத்​தைச் சேர்ந்​த​வர்​கள் 13 இலட்சம் என்​றால், மீதி 30 இலட்சம் பேர் வெளி​நா​டு​க​ளைச் சேர்ந்​த​வர்​கள். இதில், இந்​தி​யர்​க​ளின் எண்​ணிக்கை 14.5 இலட்சம். புதிய மசோ​தா​வின்​படி, குவைத்​தின் மக்​கள்​தொ​கை​யில் 15 சத​வீ​தத்​துக்கு மேல் இந்​தி​யர்​கள் இருக்​கக் கூடாது. அதன் அடிப்​ப​டை​யில், சுமார் 8 இலட்சம் இந்​தி​யர்​கள் குவைத்​தை​விட்டு வெளி​யேற்​றப்​ப​டும் நிலை ஏற்​பட்​டி​ருப்​ப​தாக முன்​னணி செய்​தித்​தா​ளான கல்ஃப் நியூஸ் பத்​தி​ரிகை தெரிவித்துள்​ளது.

எண்​ணெய் விலை​யில் சரிவு, கொரோனா நோய்த்​தொற்று கார​ண​மாக, குவைத்​தில் வாழும் வெளி​நாட்​டி​ன​ருக்கு எதிர்ப்பு எழுந்த​தை அ​டுத்து, வெளி​நாட்​ட​வர் எண்​ணிக்​கையை 70 சத​வீ​தத்​தி​ல் இ​ருந்து 30 சத​வீ​த​மாக குறைக்​கும் திட்டத்தை பிர​த​மர் ஷேக் ஷபா அல் காலித் அல் ஷபா கடந்த மாதம் முன்​மொ​ழிந்​தார். அதன் தொடர்ச்​சி​யாக இந்த நட​வ​டிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ள​தாக அந்​தப் பத்​தி​ரிகை மேலும் தெரி​வித்​துள்​ளது.

இது​தொ​டர்​பாக பாரா​ளு​மன்ற அவைத் தலை​வர் மர்​செ​ளக் அல்-​க​னீம், குவைத் தொலைக்​காட்​சிக்கு அளித்த பேட்டி​யில், வெளிநாட்​ட​வர்​கள் எண்​ணிக்​கையை படிப்​ப​டி​யா​கக் குறைக்க வகை செய்​யும் விரி​வான சட்ட மசோ​தாவை பாராளு​மன்​றத்​தில் சமர்ப்​பிக்க உள்​ள​தா​கத் தெரி​வித்​தார்.

அவர் மேலும் கூறு​கை​யில், குவைத்​தின் மக்​கள் ​தொ​கை​யில் 70 சத​வீ​தம் பேர் வெளி​நாட்​ட​வர். இது​தான் குவைத்​தின் உண்​மை​யான பிரச்னை. 33 இலட்சம் வெளி​நாட்​ட​வர்​க​ளி​லும் 13 இலட்சம் பேர் கல்​வி​ய​றிவு இல்​லா​த​வர்​க​ளா​கவோ அல்​லது படிக்​க​வும் எழு​த​வும் தெரிந்​த​வர்​க​ளாக மட்டுமோ உள்​ள​னர். குவைத் மக்​க​ளுக்கு இவர்​கள் தேவை​யில்லை. திற​னற்ற தொழி​லா​ளர்​க​ளைத் தவிர்த்து, மருத்​து​வர்​கள், திற​மை​யான மனித சக்​தியை சேர்த்​துக் கொள்ள வேண்​டும் என நான் புரிந்​து​கொள்​கி​றேன். புதிய மசோ​தா​வின்​படி, நிக​ழாண்டு 70 சத​வீ​தம் வெளி​நாட்​ட​வர்​க​ளும், அடுத்த ஆண்டு 65 சத​வீ​தம் பேரும் குறைக்​கப்​ப​டு​வர் என தெரி​வித்​தார்.

குவைத்​தில் உள்ள இந்​திய தூத​ர​கம் அளித்த தக​வ​லின்​படி, குவைத் அர​சுப் பணி​யில் 28 ஆயி​ரம் இந்​தி​யர்​கள் உள்​ள​னர். இவர்​க​ளில் செவி​லி​யர்​கள், பொறி​யா​ளர்​கள், தேசிய எண்​ணெய் நிறு​வ​னங்​க​ளில் பணி​யாற்​று​வோர் அடங்​கு​வர். சிலர் விஞ்​ஞா​னி​க​ளா​க​வும் உள்​ள​னர். சுமார் 5.23 இலட்சம் பேர் தனி​யார் துறை​க​ளில் பணி​யாற்றி வரு​கின்​ற​னர். இது​த​விர, 60 ஆயி​ரம் இந்​திய மாண​வர்​கள் துபை​யில் உள்ள 23 இந்​திய பள்​ளி​க​ளில் பயின்று வரு​கின்​ற​னர்.

குவைத் பாரா​ளு​மன்​றக் குழு ஒப்​பு​தல் அளித்​துள்ள மசோ​தா​வா​னது, விரி​வான திட்டத்​தைத் தயா​ரிப்​ப​தற்​காக சம்​பந்​தப்​பட்ட குழுவுக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளது. இந்​தி​யர்​க​ளுக்​கான எண்​ணிக்கை விகி​தத்​தைப் போல, பிற நாட்ட​வர்​க​ளுக்​கும் விகி​தம் வகுக்கப்பட்​டுள்​ளது.

வெளி​நா​டு​க​ளில் இருந்து இந்​தி​யா​வுக்கு பணம் பெறப்​ப​டு​வ​தில் சிறந்த ஆதா​ர​மாக குவைத் திகழ்​கி​றது. அங்கு பணி​யாற்​றும் இந்தி​யர்​கள் மூலம் 2018 ஆம் ஆண்​டில் 4.8 பில்​லி​யன் டொலர் இந்​தி​யா​வுக்கு அ​னுப்​பப்​பட்​டுள்​ள​து.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

You cannot copy content of this page