இன்று முழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டம்.

நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் கிழமை காலை 6 மணிவரை அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை காவல் துறை ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று முற்பகல் 9 மணிமுதல் தற்காலிகமாக காவல் துறை ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளதோடு மதியம் 12 மணிமுதல் மீண்டும் அமுலாகும் என காவல் துறைமா அதிபர் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


    Check Also

    ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

    வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். … Read more

    You cannot copy content of this page