சௌதியில் உள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை

வீசா முடிவுற்ற நிலையில் சௌதி அரேபியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் எவ்வித கட்டணம் அல்லது தண்டப்பணத்தை செலுத்தாமல் நாட்டை விட்டு வௌியேற சௌதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று காரணமாக சௌதி அரேபியவில் இருந்து வௌியே முடியாமல் உள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை கவனத்திற் கொண்டு சௌதி அரேபிய அரசு தற்காலிகமாக இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையில் உள்ள நல்லுறவின் காரணமாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page