கொரோனா வைரஸ் பரவலுக்கான பிரதான காரணம் இதுதான்

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலுக்கான பிரதான காரணமாக அமைவது புகைப்பிடித்தல் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் செயலாளர் வைத்திய ஹரித அலுத்கே இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த நிலைமை தொடர்பில் தொடர்ந்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தி வந்ததாக தெரிவித்தார்.

தற்போது காணப்படும் சட்டம் போதுமானதாக இல்லையென்றால் புதிதாக சட்டமொன்றை இயற்றியாவது நாட்டினுள் அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என தெரிவித்த அவர், வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இதனை சட்டமாக்குமாறும் தெரிவித்தார்.

இதேவேளை, புகைபிடித்தல் வைரஸ் பரவுவதில் நேரடி தாக்கத்தை ஏற்படுவத்துவதாக தெரிவித்த அவர், சிகரெட் விற்பனை மிகவும் அவதானத்திற்கு உட்பட்டது என தெரிவித்தார்.

புகைக்கும் நபர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் சதவீதம் மிகவும் அதிகம் என தெரிவித்த வைத்தியர் ஹரித அலுத்கே, உயிரை நேசிப்பவர்களாயின் உடனடியாக புகைப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.


    Check Also

    ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

    வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். … Read more

    You cannot copy content of this page