மத்திய அதிவேக நெடுச்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாண பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அதிவேக நெடுச்சாலையின் பொத்துஹெர முதல் கலகெதர வரையிலான பாதை நிர்மாண நடவடிக்கைகளே இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
4 வீதிகளைக் கொண்ட இந்த அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை 48 மாதங்களில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.