மின் கட்டணம் தொடர்பில் மகிழ்ச்சிகர செய்தி

மின்சாரம் பயன்படுத்தப்படும் அலகுகளுக்கு மாத்திரமே மின் கட்டணம் அறிவிடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டண பட்டியலில் எந்தவிதமான மேலதிக கட்டணங்களோ அல்லது உதிரியான கட்டணங்களோ அறவிடப்படாது என்பதோடு, மின்கட்டணத்திற்கான சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் அதிக மின்கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்ற அச்சம் பொது மக்களுக்கு தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

எனினும் மின் கட்டணத்திற்கான பட்டியல் கிடைக்கப்பெற்றவுடன் விரைந்து செலுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page