மினுவாங்கொடை பெண்ணுக்கு சிகிச்சையளித்த தாதி பயணித்த புகையிரதத்தில் பயணம் செய்த 50 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் ஐம்பது கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சிகிச்சையளித்த மருத்துவ தாதி பயணித்த புகையிரதத்தில் பயணம் செய்த கடற்படையினரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட தாதி புகையிரதத்தில் யாழ்ப்பாணம் சென்றார் என அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

அவர் புகையிரதத்தில் பயணம் செய்த அதேபகுதியில் பயணித்த கடற்படையினரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் பயணம் செய்த ஏனைய பயணிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page