கோத்­தாவின் உள்­ளக எதி­ரி­கள்: ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் சூடு பிடிக்கும் மோதல்கள்.

2015 ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் பலர், துணிச்­ச­லுடன் மஹிந்­தவை எதிர்த்­தனர். ராஜபக் ஷ குடும்­பத்தின் சர்­வா­தி­கா­ரத்­தனம் குறித்து விமர்­ச­னங்­களைச் செய்­தனர். அவர்­களில் சிலர் பின்னர் மஹிந்­த­வி­டமே போய் சர­ண­டை­யவும் தவ­ற­வில்லை.

அவ்­வாறு மஹிந்­தவின் பின்னால் இருந்­த­வர்கள் மத்­தி­யி­லி­ருந்து, இப்­போது, மீண்டும் எதிர்க்­கு­ரல்கள் எழும்பத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. உதா­ர­ணத்­துக்கு குமார வெல்­க­மவைக் குறிப்­பி­டலாம். 

பொது­ஜன முன்­ன­ணியின் சார்பில் கோத்­தா­பய ராஜபக்ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்­து­வது பெரும்­பாலும் உறு­தி­யாகி விட்­டது. எனினும், மஹிந்­தவின் நிழல் தலை­மையின் கீழ் உள்ள, பொது­ஜன முன்­ன­ணிக்­குள்­ளேயும்,  ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் மோதல்கள் நிகழ ஆரம்­பித்து விட்­டன.

பொது­வா­கவே, ஜனா­தி­பதித் தேர்­தலில் வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­கின்ற போதும் சரி, பாரா­ளு­மன்றத் தேர்­தல்­க­ளுக்­கான வேட்­பாளர் பட்­டியல் தயா­ரிப்பின் போதும்சரி கட்­சி­க­ளுக்குள் முரண்­பா­டு­களும் மோதல்­களும் நிகழ்­வது வழக்கம்.

அதி­ருப்தி கொண்­ட­வர்கள் தலை­மைத்­து­வத்­துக்கு எதி­ராக போர்க்­கொடி தூக்­கு­வார்கள். அதன்­பின்னர் அவர்கள் கட்­சியை விட்டு வெளி­யே­று­வார்கள். அல்­லது வெளி­யேற்­றப்­ப­டு­வார்கள்.

அவ்­வாறு வெளியே செல்­ப­வர்கள் புதிய கட்­சியை தொடங்­கு­வார்கள் அல்­லது, இது­வரை இருந்த கட்­சியின் பிர­தான எதி­ரி­யுடன் கூட்டு வைத்துக் கொள்­வார்கள் அல்­லது அதில் இணைந்து கொள்­வார்கள். இதுதான் வழக்கம்.

இலங்கை அர­சி­யலில் மாத்­தி­ர­மன்றி, மூன்றாம் உலக நாடு­களின் அர­சி­யலிலும் இது­போன்ற சம்­ப­வங்கள் சாதா­ர­ண­மான விட­யங்கள். ஜன­நா­யகம் நன்கு விருத்­தி­ய­டைந்த, கொள்கை அர­சியல் அதிகம் பின்­பற்­றப்­ப­டு­கின்ற நாடு­களில், இது அரிது.

2014ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அறி­விப்பை மஹிந்த ராஜபக்ஷ வெளி­யிடும் வரை, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் அவ­ருக்கு எதி­ராகப் பேசு­கின்ற – செயற்­ப­டு­கின்ற துணிச்சல் யாருக்­குமே இருக்­க­வில்லை. 

தேர்தல் அறி­விப்பு வெளி­யி­டப்­பட்ட பின்னர் தான், மைத்­தி­ரி­பால சிறி­சேன, ராஜித சேனா­ரத்ன, ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திர, எம்.கே.டி.எஸ்.குண­வர்த்­தன, துமிந்த திசா­நா­யக்க ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இருந்து வெளியே வந்து, ஐ.தே.க.வுடன் கைகோர்த்­தனர்.

ராஜபக் ஷ குடும்­பத்தின் ஆதிக்­கத்­துக்கு எதி­ரான மனோ­நி­லையில் இருந்த போதும்,  பெரும்­பா­லா­ன­வர்கள் துணிச்­ச­லின்றி, ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்­த­வுக்கே ஆத­ர­வ­ளித்­தனர். ஏனென்றால், மஹிந்­தவைத் தோற்­க­டிக்க முடி­யாது என்ற நம்­பிக்கை இருந்­தது. அதனால் அவர்­க­ளுடன் பகைத்துக் கொள்ள விரும்­பாமல் ஒதுங்­கி­யி­ருந்­தனர்.

ஆனால், மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ராக குரல் கொடுப்­பது ஆபத்­தா­னது, அர­சி­யலை சூனி­ய­மாக்கி விடும் என்ற அச்­ச­மான நிலை, இந்த ஐந்து ஆண்­டு­களில் முற்­றா­கவே மாறி­யி­ருக்­கி­றது என்­பதை இப்­போது உணர முடி­கி­றது.

2015 ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் பலர், துணிச்­ச­லுடன் மஹிந்­தவை எதிர்த்­தனர். ராஜபக் ஷ குடும்­பத்தின் சர்­வா­தி­கா­ரத்­தனம் குறித்து விமர்­ச­னங்­களைச் செய்­தனர். அவர்­களில் சிலர் பின்னர் மஹிந்­த­வி­டமே போய் சர­ண­டை­யவும் தவ­ற­வில்லை.

அவ்­வாறு மஹிந்­தவின் பின்னால் இருந்­த­வர்கள் மத்­தி­யி­லி­ருந்து, இப்­போது, மீண்டும் எதிர்க்­கு­ரல்கள் எழும்பத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. உதா­ர­ணத்­துக்கு குமார வெல்­க­மவைக் குறிப்­பி­டலாம். 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­ய­மான தலை­வர்­களில் ஒரு­வ­ரான அவர், ஆரம்­பத்­தி­லி­ருந்தே மஹிந்­த­வுக்குப் பின்னால் இருந்­தவர்.  இப்­போது மஹிந்த ராஜபக் ஷவின் நம்­ப­கத்­துக்­கு­ரி­ய­வர்­க­ளாக இருப்­ப­வர்கள், அவ­ருடன் சேர்ந்து கொள்­வ­தற்கு முன்­னரே, மஹிந்­தவை வலு­வாக ஆத­ரித்­தவர்.

அப்­ப­டிப்­பட்­டவர் இப்­போது மஹிந்­தவை எதிர்க்­கா­வி­டினும், அவ­ரது முடி­வையும், அவ­ரது கட்­சியின் தீர்­மா­னத்­தையும் எதிர்க்­கின்ற நிலைக்கு வந்­தி­ருக்­கிறார்.

2010ஆம் ஆண்டு சரத் பொன்­சே­காவைத் தண்­டிக்க மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­த­போது, அதனை எதிர்க்கும் துணிச்சல் இருக்­க­வில்லை என்று லங்­கா­தீப பேட்­டியில் கூறி­யி­ருக்கும் குமார வெல்­க­ம­வுக்கு இப்­போது அந்த துணிச்சல் வந்­தி­ருக்­கி­றது.

அவ­ருக்கு இப்­போது துணிச்சல் வந்­தி­ருப்­ப­தற்கு, மஹிந்­த­விடம் இப்­போது அதி­காரம் இல்லை என்­பது ஒரு கார­ண­மாக இருக்­கலாம். ஆனாலும், அவர் மஹிந்­தவின் தீர்­மா­னத்தை எதிர்ப்­ப­தற்குக் காரணம் கோத்­தா­பய ராஜபக் ஷ தான்.

கோத்­தா­பய ராஜபக் ஷவை வன்­மை­யாக எதிர்க்­கின்­ற­வ­ராக குமார வெல்­கம மாத்­தி­ரமே இருக்­கிறார்.

இன்­றைய நிலையில் ஐ.தே.க.வினரோ, ஜே.வி.பி.யினரோ கூட, கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு எதி­ரான பிர­சா­ரங்­களை இன்­னமும் ஆரம்­பிக்­க­வே­யில்லை. ஆனால், குமார வெல்­கம அதனை பல மாதங்­க­ளுக்கு முன்­னரே தொடங்கி விட்டார்.

அவர், கோத்­தா­பய ராஜபக் ஷவை கொலைப் பின்­னணி கொண்­டவர் என்றும், ஜன­நா­ய­கத்­துக்கு பொருத்­த­மற்­றவர் என்றும், போருக்குப் பயந்து ஓடி­யவர் என்றும் வெளிப்­ப­டுத்தி வரும் விமர்­ச­னங்­களும் குற்­றச்­சாட்­டு­களும் கோத்­தா­பய ராஜபக் ஷவின் அர­சியல் எதிர்­கா­லத்­துக்கு சிக்­கலைக் கொடுக்கக் கூடி­யவை என்­பதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை.

மஹிந்­தவை மதிப்­ப­வர்கள் கூட, அவ­ரது குடும்­பத்தின் ஆதிக்­கத்தை எதிர்க்­கி­றார்கள். அதுதான், குமார வெல்­கம போன்­ற­வர்­க­ளுக்குப் பலத்தைக் கொடுக்­கி­றது.

குமார வெல்­கம இன்­னமும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லேயே இருப்­ப­தான துணிச்­சலில் தான் பொது­ஜன முன்­ன­ணிக்கு சவால் விடுத்து வரு­கிறார்.

குமார வெல்­க­மவின் இந்த போர்க்­கொடி பொது­ஜன முன்­ன­ணிக்குள் எந்­த­ள­வுக்கு தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்று கூற­மு­டி­யாது. ஆனால், தன்னைப் போல குடும்ப ஆதிக்­கத்தை எதிர்க்கும் பலர் இருக்­கி­றார்கள் என்று குமார வெல்­கம கூறி­யி­ருப்­பதை இல­கு­வாக எடுத்துக் கொள்ள முடி­யாது.

பொது­ஜன முன்­ன­ணிக்கு ஆத­ர­வ­ளிக்கும் இட­து­சாரிக் கட்­சிகள் குறிப்­பாக, வாசு­தேவ நாண­யக்­கார போன்­ற­வர்கள் இன்­னமும் சமல் ராஜபக் ஷவை வேட்­பா­ள­ராக நிறுத்­து­வ­தற்கே ஆத­ரவு கொடுத்து வரு­கி­றார்கள்.

எனினும், வாசு­தேவ, திஸ்ஸ விதா­ரண, டியூ குண­சே­கர போன்ற இட­து­சா­ரிகள், இப்­போது முன்­னைய பலத்­து­டனோ, கொள்கை ஓர்­மத்­து­டனோ இல்லை. அவர்கள் ஓரிரு பாரா­ளு­மன்ற ஆச­னங்­க­ளுக்­காக மஹிந்­த­வுக்கு வால் பிடிக்கும் அர­சி­யல்­வா­தி­க­ளாக மாறி விட்­டார்கள்.

எனவே, இந்த காகித இட­து­சா­ரிகள் கோத்­தா­வுக்கு எதி­ரான நிலைப்­பாட்டில் எந்­த­ள­வுக்கு உறு­தி­யாக இருப்­பார்கள் என்று கூற­மு­டி­யாது, எனினும், அவர்­களை தமது வழிக்குக் கொண்டு வரு­வது மஹிந்­த­வுக்கு அவ­சி­ய­மா­னது.

ஏனென்றால், சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் கோத்­தா­வுக்குக் கிடைப்­பது கடினம். ‘ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் தனி­யாக போட்­டியில் குதிக்கப் போவ­தாக தெரி­கி­றது. 

இத்­த­கைய நிலையில், தனியே கோத்­தா­பய ராஜபக் ஷ சிங்­கள பௌத்த வாக்­கு­களை மட்டும் நம்பி அரி­யணை ஏறும் கனவில் இருக்க முடி­யாது, அது­பற்றி அவர்கள் நம்­பிக்கை கொண்­டி­ருந்­தாலும். அது சவா­லா­னது.

கோத்­தா­பய ராஜபக் ஷ தோல்­வி­ய­டையும் நிலை ஒன்று ஏற்­பட்டால், அவ­ருக்கு அதற்குப் பின்னர் அர­சியல் எதிர்­கா­லமே இல்­லாமல் போய் விடும். ஏனென்றால், அடுத்­த­முறை மஹிந்த ராஜபக் ஷ தனது மகன் நாமல் ராஜபக் ஷவை நிறுத்த முனை­வாரே தவிர, தோற்­றுப்­போன தம்­பியை மீண்டும் நிறுத்த முயற்­சிக்­க­மாட்டார்.

எனவே. கோத்­தா­பய ராஜபக் ஷவைப் பொறுத்­த­வ­ரையில் அர­சி­யலில் தொடர்ந்து ஈடு­படும் முடிவில் இருப்­பா­ரெனில், ஜனா­தி­பதித் தேர்­தலில் அவ­ரது வெற்றி மிகவும் அவ­சி­ய­மா­னது. இல்­லையேல் அவ­ரது இருப்பு அர­சி­யலில் கேள்­விக்­குள்­ளாகும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

இவ்­வா­றான நிலையில் தான், குமார வெல்­கம போன்ற உள்­ளக எதி­ரிகள் கோத்­தா­வுக்கு பெரும் சவா­லாக இருப்­பார்கள்.

கோத்­தா­பய ராஜபக் ஷவை தான் ஆத­ரிக்­கப்­போ­வ­தில்லை  என்றும், அவரை முன்­னி­றுத்த எடுத்த முடிவு கட்­சியின் தலை­வர்­க­ளுடன் ஆலோ­சிக்­காமல் எடுக்­கப்­பட்­டது என்றும் குமார வெல்­கம குற்­றம்­சாட்­டி­யி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷ தனது கட்­சிக்குள் சர்­வா­தி­கா­ரத்­த­னத்­து­ட­னேயே முடி­வு­களை எடுக்­கிறார். இன்­னமும் அவர் பொது­ஜன முன்­ன­ணியின் உறுப்­பி­ன­ராக கூட இல்லை. அதன் நிழல் தலை­வ­ராக இருந்து கொண்டே, மஹிந்த எடுக்கும் தான்­தோன்­றித்­த­ன­மான முடி­வுகள், அவ­ருக்கு எதி­ரான அலையை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.

இத்­த­கைய நிலையில், குமார வெல்­கம பொது­ஜன முன்­ன­ணிக்குள் இருந்து வெளி­யேறி சுதந்­திரக் கட்­சி­யுடன் மீண்டும் இணைந்து செயற்­பட முனைந்­தாலோ, அல்­லது ஐ.தே.க.வுடன் இணைய முயன்­றாலோ, இல்லை தனித்து நின்றே எதிர்த்துக் குரல் எழுப்­பி­னாலோ, கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும்.

ராஜபக் ஷ குடும்ப ஆட்சி தான் 2015 தேர்­தலில் மக்களின் வெறுப்பாக வெளிப்பட்டது.

மீண்டும் அத்தகையதொரு ஆட்சிக்குள் செல்வதற்கான முயற்சிகளை ராஜபக் ஷ குடும்பம் மிக கவனமாக முன்னெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், குடும்ப ஆட்சியின் ஆபத்தை மிக கவனமாக மக்கள் முன் கொண்டு செல்லும் போது, அது மஹிந்த தரப்புக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும்.

அத்தகைய சவாலை ஏற்படுத்தும் நிலையில் தான் குமார வெல்கம இருக்கிறார். அவர் மட்டும் தான் இந்த அணியில் இருக்கிறார் என்றில்லை. இன்னும் பலர் குடும்ப ஆட்சிக்கு எதிராக கிளம்பும் நிலை ஏற்படும் போலவே தெரிகிறது.

மஹிளந்த கூட, 2014இல் தேர்தலுக்கு அழைப்பு விடும் வரை தனக்கான சவால் தனது மடிக்குள் தான் இருக்கிறது என்பதை அறியாமல் இருந்தார். ஆனால் கோத்தாவுக்கு அப்படியில்லை. அவருக்கான சவால் அவரது அணிக்குள்ளேயே இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு தான் களமிறங்கப் போகிறார்.

-சத்­ரியன்

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page