தனிமைப்படுத்தல் மீறினால் – சட்டமும் தண்டனையும்

தனிமைப்படுத்தல் அறிவுரைகளிற்கு முரணாக செயற்பட்டால் அதன் பின்விளைவுகள் என்ன?

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடை செய்தல் கட்டளை சட்டத்திற்கு கீழ் அமையும் விடயங்கள்

  • நீங்கள் தனிமைப்படுதல் செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட முடியும்.
  • உங்கள் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட முடியும்.
  • மற்றவரிகளிடமிருந்து விலக்கிட அல்லது சிகிச்சைக்காக பலவந்தமாக அனுப்பப்பட முடியும்.
  • அதற்கு உடன்படாவிடின் பிடியாணையின்றி கைது செய்யப்படவும் வழக்கு தொடரப்படவும் முடியும்.
  • குற்றம் நிரூபிக்கப்பட்டால் 06 மாதம் வரை சிறை தண்டனையும் அல்லது ரூபா. 2000 தொடக்கம் ரூபா. 10,000 வரையான அபராதமும் விதிக்கப்பட முடியும்.

இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழான குற்றமாகும்.

  • கவனயீனமாக அல்லது வேண்டுமென்று நோய் பரவுவதற்கு இடமளித்தல் அல்லது தனிமைப்படுத்தல் செயற்பாட்டை பின்பற்ற தவறல் என்ற அடிப்படையில் குற்றமாகும்.
  • இது பிடியாணையின்றி கைது செய்து சிறையில் அடைக்கக்கூடிய குற்றமாகும்.
  • இதற்கு 06 மாதம் தொடக்கம் 02 வருடம் வரை சிறை தண்டனையுடன் ரூபா. 1500 அபராதத்திற்கு உட்படுத்த முடியுமான குற்றமாகும்.

தவறொன்றிற்கு ஒத்தாசை வழங்குதல் குற்றமாகும்.

  • மேற்படி குற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நபர்கள் அல்லது உதவி புரியும் நபர்களை பிடியாணையின்றி கைது செய்து சிறையில் அடைத்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட முடியும்.
  • மேற்படி குற்றத்திற்காக தண்டனைக்குட்படுத்தப்பட முடியும்.
  • மேற்குறிப்பிட்ட குற்றங்களுக்கு பயன்படுத்திய அசையும், அசையா சொத்துக்கள் தடை செய்யப்படும்.

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page