பிற நாடுகளின் முடிவை பொறுத்தே கொரோனா தடுப்பூசியை எமது மக்களுக்கு செலுத்துவோம்

பிற நாடுகளின் முடிவை பொறுத்தே கொரோனா தடுப்பூசியை எமது மக்களுக்கு செலுத்துவோம் – தென்கொரியா அறிவிப்பு!

கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டு அதிலிருந்து ஓரளவுக்கு மீண்டு வந்த நாடு தென் கொரியா. ஆனாலும் தற்போது தென் கொரியாவில் கொரோனா வைரசின் 2வது அலை பரவி வருகிறது.

இந்நிலையில் பிற நாடுகளின் முடிவைப் பொறுத்தே கொரோனா தடுப்பூசியை தென்கொரியர்களுக்கு செலுத்துவோம் என தென்கொரியா அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த தென்கொரியாவின் பிரதமர் சுங் சைக்யூன் கூறுகையில்:-

கொரோனா வைரஸ் பரவல் கடுமையாக இருக்கும் UK போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்த அனுமதித்து வருகின்றன. எங்கள் அரசாங்கத்தை பொறுத்தவரை எங்கள் குடிமக்களின் பாதுகாப்புதான் முக்கியம். பிற நாடுகளில் கொரோனாவுக்குரிய தடுப்பூசி மருந்துகளின் முடிவுகளை ஆராய்ந்தே வருகிறோம். அதனைத் தொடர்ந்து எங்களுடைய மக்களுக்கு கொரோனாவுக்குரிய தடுப்பூசியை வழங்க முடிவு செய்வோம். நாங்கள் இவ்விடயத்தில் கவனமாகவே இருக்கிறோம்” என கூறினார்.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

You cannot copy content of this page