றிசாத்திடமிருந்து 500 மில்லியனை அறவிட்டு, 2500 ஏக்கரில் மரங்களை நடவுள்ளோம் – வனவளப் பணிப்பாளா் வீரகொட

வில்பத்து தேசிய வன புங்காவில் கல்லாறு அன்டிய காடுகளில் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் மரங்களை நடுவதற்கு முன்னாள் அமைச்சா் றிசாத் பதியுத்தீனிடமிருந்து 500 மில்லியன் (50 கோடி) ருபாவை அறவிட உள்ளதாக வன வளப் பணிப்பாளா்  வீரகொட இன்று -19-  ஊடகங்களுக்குத் தெரிவித்தாா்.

ஒர் ஏக்கருக்கு மரநடுவதற்கு 2 இலட்சம் ருபா செலவாகும் எனவும்  தெரிவித்துள்ளாா்.

இந் நிதி முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுத்தீனிடமிருந்து அவரது சொந்தப் பணத்தில் இருந்து அறவிட மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம்  தீா்ப்பு வழங்கியதாகவும் அவா் தெரிவித்தாா்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page