மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்!

கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமானால்

மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆராயப்படும் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று ( 12) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே இதனைத் தெரிவித்தார்

சமூகப் பரவலைத் தடுப்பதற்கு அடிப்படை சுகாதார வசதிகளை பின்பற்றுவது மாத்திரமின்றி ஒவ்வொருவரும் உண்மை நிலைமையை வெளிப்படுத்துவதும் பெரும் உதவியாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page