( TRCSL ) பதிவு செய்யப்படாத புதிய மொபைல்களில் உள்ள சிம் அட்டைகள் நாளை முதல் செயலிழக்கப்படும்.


நாளை (01) முதல் தொலைத்தொடர்பு  நெட்வொர்க்குகளுடன் இணைக்கும் புதிய  மொபைல்
தொலைபேசிகள் , சாதனங்களை கொள்வனவு செய்யும்போது  TRCSL அனுமதி / பதிவு உள்ளதா என  சரிபார்க்கப்பட வேண்டும் என்று இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( TRCSL )   அறிவித்துள்ளது.

இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய  இயக்குநர் ஜெனரல் ஓஷாதா சேனநாயக்க,  தொலைத்தொடர்பு   மொபைல்  நெட்வொர்க்கில் ஏற்கனவே இணைக்கப்பட்ட சிம் கார்டுடன் இயக்கப்படும் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு , மொபைல் தொலைபேசிகளுக்கு  விலக்கு அளிக்கப்படும் என்றார்.

மொபைல்  சாதனங்களை இறக்குமதி செய்யும் அல்லது கொண்டு வரும் நபர்கள் TRCSL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ( http://www.trc.gov.lk ) வழியாக பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது .

தொலைத் தொடர்புத் துறையில் நடைபெற்று வரும் பன்முக தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக சந்தை இடத்தின் நிலைமைகளின் அடிப்படையில் தொலைத் தொடர்பு விதிமுறைகள் வேறுபடுகின்றன.

எனவே, TRCSL  வழங்கிய விற்பனையாளர் உரிமம் வைத்திருக்கும் விற்பனையாளர்களிடமிருந்து சிம் கார்டுடன் இயக்கப்படும் தொலைத்தொடர்பு உபகரணங்களை வாங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை TRCSL  அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கருடன் வழங்க மட்டுமே தகுதியுடையவர்கள்.

TRCSL  அங்கீகரிக்கப்பட்ட தொலைபேசிகளை நாளை முதல் TRCSL உடன் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை ”, என  சேனநாயக்க மேலும் தெரிவித்தார்.

TRCSL க்கு வாடிக்கையாளர்கள் தங்கள் TRCSL அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கரின் நம்பகத்தன்மையை தங்கள் விற்பனையாளர் மூலம் சரிபார்க்க முடியும் .

send SMS to 1909 after typing IMEI<15digit IMEI number>) to the TRCSL.

சாதனங்கள் பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அதிக கதிர்வீச்சை வெளியிடுவதால், புதுப்பிக்கப்பட்ட (போலி) தொலைபேசிகளை இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஓஷாதா சேனநாயக்க தெரிவித்தார்.

சிம் மூலம் இயக்கப்படும் பதிவு செய்யப்படாத தொலைத்தொடர்பு உபகரணங்கள் எதிர்காலத்தில் ஆபரேட்டரால் செயலிழக்கப்படும், அதே நேரத்தில் TRCSL அத்தகைய உபகரணங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கும் என்றுTRCSL  இயக்குநர் ஜெனரல் மேலும் தெரிவித்தார்

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page