மாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் – இறக்குமதி இறைச்சியை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை

இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

கால்நடைகளை கொல்வது குறித்து கடந்காலங்களில் உள்ளுராட்சி அதிகாரசபைகள் நிறைவேற்றிய சட்டங்கள்விதிமுறைகளை திருத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுப்பது என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்தனை அதனை உண்பவர்களுக்கு சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பது என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

விவசாயநடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாத மாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கையை எடுப்பது எனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page