இப்­ரா­ஹீ­முக்கு பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்பு இருப்­ப­தாக இன்னும் நம்ப முடி­ய­வில்லை

பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­பட்ட நபர்­க­ளுக்கு உதவ வேண்­டிய அவ­சியம் எமக்கு இல்லை.  இப்­ராஹீம் விட­யத்தில் தாக்­கு­தலின்  பின்னர் தான் அவர் மீது பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டது. அவ­ருக்கு  பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்பு இருப்­ப­தாக என்னால் இன்­னமும் நம்ப முடி­ய­வில்லை என வணிக அமைச்சின் செய­லாளர்  நீல் ரஞ்சித் அசோக்க பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில்  நேற்று சாட்­சி­ய­ம­ளித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்துக்கு அறிக்கை சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் நேற்று புதன்­கி­ழமை வணிக  அமைச்சின் செய­லாளர் நீல் ரஞ்சித் அசோக்க சாட்­சி­ய­ம­ளித்த வேளை­யி­லேயே  இவற்றைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும்  சாட்­சி­ய­ம­ளிக்­கையில் 

கேள்வி:- கைத்­தொழில் அபி­வி­ருத்தி சபை­யி­னூ­டாக பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு  கழிவு இரும்­புகள் வழங்­கப்­பட்­டமை  தொடர்பில் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது இது உண்­மையா?

பதில்:- குற்­றஞ்­சாட்­டப்­படும் கொலேசஸ்  கம்­பனி 2011 இல் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. குறித்த கம்­பனி அண்­மையில் தமது பணிப்­பாளர் சபையை மாற்­றி­யுள்­ளது. கழிவு இரும்பு வகை­களை மீள் உற்­பத்தி செய்யும் நிறு­வ­னங்­களில் இது பிர­தான நிறு­வ­ன­மாகும். இவர்­க­ளி­ட­முள்ள இயந்­தி­ரங்­க­ளி­னூ­டாக 11 ஆயிரம் கிலோ கழிவு இரும்­பு­களை உருக்க முடியும். அதிகம் கழிவு இரும்­பு­களைக் கொண்டு உற்­பத்தி செய்­வதால் இந்த நிறு­வ­னத்­திற்கு கூடுதல் கழிவு இரும்­புகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. குண்டுத் தாக்­குதல் சம்­ப­வத்தின் பின்னர் மேல­திக செய­லாளர் அடங்­க­லான மூவர் கொண்ட குழு­வி­னூ­டாக விசா­ரணை நடத்­தினோம்.இந்த கம்­ப­னியின் வரு­டாந்த தேவை 1200 மெற்றிக் தொன்­னாக உள்­ளது. பாது­காப்பு அமைச்­சி­னூ­டாக ஒதுக்கும் வெற்று ரவைகள் கோரப்­பட்­டி­ருந்­தன. அவை சேத­மாக்­கப்­பட்டு வழங்­கப்­பட்­டன. இரு தட­வை­களே அவை கிடைத்­தன.

கேள்வி:- குறித்த கம்­ப­னிக்கு கழிவு இரும்­பு­களை வழங்­கு­மாறு யாரா­வது கோரி­னார்­களா?

பதில்:- இல்லை. கிராம சேவகர், பிர­தேச செய­லாளர், மற்றும் மாவட்ட செய­லாளர் நிய­மிக்கும் குழு என்­ப­வற்றின் அனு­ம­தியின் பின்­னரே கழிவு இரும்பு வழங்­கப்­படும்.

கேள்வி:- ச.தொ.ச.  வாகனங்கள் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக  குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது? இதன் உண்­மைத்­தன்மை என்ன? 

பதில்:- இது தொடர்பில்  மேல­திக செய­லாளர் ஊடாக விசா­ரணை நடத்­தினேன். அந்தக் குற்­ற­ச்சாட்டு முற்­றிலும் தவ­றா­னது.

கேள்வி:- இது தொடர்பில் அவ­ம­திப்பு வழக்கு தொடர  முடி­யாதா?

பதில்:- அது யதார்த்­த­மா­காது. என்னை அவ­ம­தித்து செய்தி வெளி­யிட்­டாலும் மௌன­மாக இருப்பேன். அமைச்­ச­ருக்கு எதி­ராக தினமும்  செய்­திகள் வெளி­யாகும்.

கேள்வி:- இப்­ரா­ஹீமின் நிறு­வ­னத்­திற்கு அதிக வெற்று ரவைகள் வழங்­கப்­பட்­ட­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு வழங்­கு­மாறு அமைச்­சரோ வேறு யாரா­வதோ அழுத்தம் வழங்­கி­யுள்­ள­னரா?

பதில்:- இல்லை. சிலர் குறித்த நிறு­வ­னத்­திற்கு வழங்­கு­மாறு பரிந்­துரை வழங்கி கடிதம் அனுப்­பி­யுள்­ளனர். ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இருந்தும் 500 மெற்றிக் தொன் வழங்­கு­மாறு கடிதம் வந்­தது.ஆனால் எம்­மிடம் போதி­ய­ளவு மூலப்­பொ­ருட்கள் கிடை­யாது. சாந்த பண்­டார எம்.பி.யும் அவ்­வாறு கடிதம் வழங்­கி­யுள்ளார்.கொலேசஸ் கம்­ப­னிக்கு வழ­ங்கு­மாறு கோரப்­பட்­டாலும் எந்த அழுத்­தமும் வழங்­கப்­ப­ட­வில்லை.

கேள்வி :- ச.தொ.ச. நிறு­வ­னத்தில் ரக­சிய அறை­யி­ருப்­ப­தாக சில ஊழி­யர்கள் ஊட­கங்­க­ளுக்கு கூறி­யி­ருந்­தனர்.

பதில் :- ச.தொ.ச.  நிறு­வன 9 ஆம் மாடியில் உள்ள அலு­வ­ல­கத்தைத்தான் இவ்­வாறு கூறி­யுள்­ளனர். அது யுனிடோ எனும் நிறு­வ­னத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

கேள்வி:- இப்­ராஹீம் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன்  தொடர்பு என கூறப்­ப­டு­கி­றது.  இதன் உண்மைத் தன்மை என்ன? 

பதில் :-  அவர் அமைச்­ச­ருடன் பேச்சு நடத்­தி­ய­தாக ஊட­கங்கள் கூறின. அவர் வறிய நிலையில் இருந்து உயர் நிலைக்கு வந்­தவர். அவ­ருடன்  நான் தொடர்பு பட்டு செயற்­பட்­டது கிடை­யாது. எம்­முடன் தொடர்­பு­பட்­டுள்ள வர்த்­த­கர்­களில் முஸ்­லிம்கள் அதிகம். அதைத் தவிர எனக்கு எதுவும் தனிப்­பட்ட முறையில் தெரி­யாது. 

கேள்வி:- பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு உங்கள் அமைச்சு உத­வி­யுள்­ளதா?

பதில்:- இல்லை. அவ்­வாறு தெரிந்தால் உதவ மாட்டோம். இப்­ராஹீம் விட­யத்தில் தாக்­கு­தலின்  பின்னர் தான் அவர் மீது பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்­டு­ வந்­தது. நான் இன்னும்  அவர் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு தொடர்பு இருப்­ப­தாக நம்­ப­வில்லை. கைத்­தொழில் அபி­வி­ருத்தி சபை கோரிய பின்னர் இரு தட­வைகள் பாது­காப்பு சபை பழைய வெற்று ரவைகள் வழங்­கின. 2017 இல் தான் முதன் முறை இரா­ணுவம் வழங்­கி­யுள்­ளது.

கேள்வி:- இன்சாப் இப்­ராஹீம் அமைச்சு வாக­னங்­களை பயன்­ப­டுத்­தி­யுள்­ளாரா?

பதில்:- இல்லை. அவர் பொரு­ளா­தார ரீதியில் பல­வீ­ன­மா­ன­வ­ரல்ல. அவ­ருக்கு எமது வாக­னங்­களைப் பயன்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் இருக்­க­வில்லை. 

கேள்வி:- பிர­தேச சபை உறுப்­பினர் அப்துல் ஹனூன் என்­பவர் அமைச்சின் இணைப்புச் செய­லா­ள­ராக செயற்­பட்­டுள்­ளாரா?

பதில்: இல்லை.

கேள்வி :- அமைச்சின் ஆலோ­ச­க­ராக மௌலவி ஒருவர் இருந்­தாரா?

பதில்:-  இல்லை. நான் செய­லா­ள­ராக வந்த பின்னர் அவ்­வாறு யாரும் இருக்­க­வில்லை.

கேள்வி:- தாக்­கு­த­லுக்கு பயன்­ப­டுத்­திய மூலப்­பொ­ருட்­களும் கைத்­தொழில் அபி­வி­ருத்தி சபை வழங்­கிய மூலப்­பொ­ருட்­க­ளுக்கும் தொடர்பு உள்­ளதா என்று தெரி­யுமா?

பதில்:- பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ரிடம் இது தொடர்பில் எழுத்து மூலம்  வின­வி­யுள்ளோம். இது­வரை எந்த பதிலும் கிடைக்­க­வில்லை.

கேள்வி:- இப்­ரா­ஹி­முக்கு உத­வு­மாறு அமைச்சர் ரிசாத் கோரி­யுள்­ளாரா?

பதில்:- ஒரு­போதும் இல்லை.

கேள்வி:-  கொலன்­னாவ கைத்­தொ­ழிற்­சாலை சுற்­றி­வ­ளைப்பை எல்.ரீ.ரீ.ஈ ஆயுத களஞ்­சி­யத்தை சுற்­றி­வ­ளைத்­தது போன்று ஊட­கங்கள் காண்­பித்­தன. அது­பற்றி? 

பதில்:- அங்கு வேறு என்ன நடந்­துள்­ளது என்­று­தெ­ரி­யாது. நாம் வழங்­கிய மூலப்­பொ­ருட்­களை பயன்­ப­டுத்தி வெடி­பொ­ருட்கள் உரு­வாக்­கப்­பட்­டதா என்­பதை இராணுவம் இதுவரை உறுதி செய்யவில்லை.

கேள்வி:-  ச.தொ.ச. வாகனங்களில் இருக் கும்  ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை கொண்டு அவை பயங்கரவாத நடவடிக்கைக்கு பயன்படுத்தி யுள்ளதாக உறுதியாகியுள்ளதாக குற்றஞ் சாட் டப்படுகிறது.?

பதில்:- அந்த தொழில்நுட்பத்தை பயன்ப டுத்தித்தான் விசாரணை நடத்தினோம். அவை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை. குறித்த தினம் குறித்த இடத்திற்கு அவை பயணம் செய்ய வில்லை.

கேள்வி: -அமைச்சர் ரிசாத் உத்தியோகபூர்வ வாகனத்தை மீள கையளித்துள்ளாரா?

பதில்:-ஆம். இரண்டு தடவை அமைச்சு பதவி வகிக்காத நிலையில் மறுநாளே அவ ற்றை கையளித்தார். இம்முறையும் அவ் வாறே வழங்கினார்.

https://www.virakesari.lk/article/59177

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page