சொந்த வாகனங்களில் பயணிப்போர் முகக்கவசங்கள் அணிய வேண்டுமா?

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பொதுமக்கள் முகக்கவசங்களை எவ்வாறு அணிய வேண்டுமென பொது சுகாதார பிரதி பணிப்பாளர் வைத்திய நிபுணர் பபா பலிஹவதன விளக்கியுள்ளார்.

சொந்த வாகனங்களில் பயணிக்கும் போது மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடும் போதும் முகக்கவசங்கள் அணியவேண்டிய அவசியம் இல்லையென அவர் தெரிவித்தார்.

அதேபோல, நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, எந்தவொரு பிரதேசங்களிலும் பொசன் பௌர்ணமியை முன்னிட்டு தானங்கள் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் குறித்த பணிப்பாளர் குறிப்பிட்டார்.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter