எம்பிலிப்பிட்டி – பனாமுர- முல்எடியாவல பகுதியில் நாய் கடித்த சம்பமொன்றையடுத்து ஏற்பட்ட தகராறினால் மூத்த சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலைசெய்த சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்தில் முல்எடியாவல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் பிள்ளையை அண்மையில் குறித்த சந்தேகநபருக்கு சொந்தமான நாய் கடித்துள்ளது.
இதனால், குறித்த நபர் நாயைக் கொல்லும் நோக்கில் கூரிய ஆயுதத்துடன் நேற்று (06) சந்தேக நபரின் வீட்டுக்கு சென்றபோது, தகராறு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது நாயைக் காப்பாற்ற முயன்றபோது, சந்தேகநபரின் மனைவியின் கை வெட்டப்பட்டதால் காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த சந்தேகநபர் தனது மூத்த சகோதரனின் கையிலிருந்த ஆயுதத்தால் அவரை தாக்கி கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதற்கமைய, 27 வயதான சந்தேக நபரை பனாமுர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காயமடைந்த அவரது மனைவி தற்போது எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஹிரு செய்திகள் –hirunews.lk– (2022-02-07 16:52:23)