மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம் : 44 மத தலங்கள் தாக்கப்பட்டமைக்கு சட்டம் பயன்படுத்தப்படாதது ஏன்?


சுமார் 3 வரு­டங்­க­ளாக அரச கைதில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பிர­தி­வா­தி­களை, பிணையில் விடு­வித்து நியா­ய­மான வழக்கு விசா­ரணை ஒன்­றுக்­கான சந்­தர்ப்பம் அளிக்­கப்­படல் வேண்டும் என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர் கேகாலை மேல் நீதி­மன்றில் வாதங்­களை முன் வைத்து கோரிக்கை விடுத்­துள்ளர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக் காலப்­ப­கு­தியில் மாவ­னெல்லை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­களில் மாவ­னெல்லை திதுல்­வத்­தை­யிலும் ஏனைய இடங்­க­ளிலும் ஐந்து புத்தர் சிலை­களை சேதப்­ப­டுத்­தி­யமை தொடர்பில் 16 பேருக்கு எதி­ராக, கேகாலை மேல் நீதி­மன்றில் சட்ட மா அதி­பரால் தொட­ரப்­பட்­டுள்ள வழக்கின் விசா­ர­ணைகள் கடந்த வாரம் இடம்­பெற்ற போதே, 1,2,5,12,13,16 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக மன்றில் ஆஜ­ராகி அவர் இந்த வாதத்தை முன் வைத்­துள்ளார்.

இது குறித்த வழக்கு, கடந்த வாரம், கேகாலை மேல் நீதி­மன்றில் நீதி­பதி ஜகத் கஹந்­த­க­மகே தலை­மை­யி­லான ஜயகி டி அல்விஸ் மற்றும் இந்­திகா காலிங்­க­வங்ச ஆகிய நீதி­ப­திகள் அடங்­கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இதன்­போதே அவர் இந்த வாதத்தை முன் வைத்தார்.
இதன்­போது வாதங்­களை முன் வைத்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர்,
பல சந்­தர்ப்­பங்­களில், பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்கள் தொடர்­பு­பட்ட இதனை ஒத்த சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. எனினும் சிறு­பான்மை முஸ்­லிம்கள் தொடர்புபட்ட இந்த சம்­ப­வத்தை மட்டும், அதுவும் மேல் நீதி­மன்றின் மூன்று நீதி­ப­திகள் முன்­னி­லையில் , பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் குற்றப் பத்­தி­ரி­கையை தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் எந்த அடிப்­ப­டையில் தேர்ந்­தெ­டுத்தார்?

பல சம்­ப­வங்கள் இருந்த போதும், நாம் மத வழி­பாட்டுத் தலங்கள் தாக்­கப்­பட்­டமை தொடர்பில் 44 சம்­ப­வங்கள் தொடர்­பி­லான வழக்கின் பட்­டி­ய­லொன்­றினை சமர்ப்­பித்­துள்ளோம்.

இவற்றில் 20 சம்­ப­வங்கள் 2018 ஆம் ஆண்டு நடந்­துள்­ளன. எனினும் 2018/12/26 இல் திதுல்­வத்த புத்தர் சிலை தகர்ப்பு தொடர்­பி­லான வெறுப்­பூட்டும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு முன்னர் அவை இடம்­பெற்­றுள்­ளன. அந்த புத்தர் சிலை தகர்ப்பு நட­வ­டிக்­கைக்கு முன்னர் பதி­வான 20 சம்­ப­வங்­களில் 18 சம்­ப­வங்கள் முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­த­லாகும். ஏனைய 2 இல் ஒன்று புத்தர் சிலை தகர்ப்பு சம்­ப­வமும், இந்து கோயில் ஒன்றின் மீதான தாக்­கு­த­லு­மாகும்.

பட்­டி­யலை பார்க்கும் போது முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் 18 மீதான தாக்­கு­தல்கள் தொடர்பில் 60 பெரும்­பா­ன்மை சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்ள போதும், அவர்கள் இந்த வழக்கை போலல்­லாது பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர் என்­ப­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும்.

அந்த பட்­டி­ய­லி­லேயே ஆரயும் போது 2019 மற்றும் 2020 ஆம் ஆண்­டு­களில் மத வழி­பாட்டு பொருட்கள் மற்றும் இடங்கள் மீதான தாக்­கு­தல்கள் 24 பதி­வா­கி­யுள்­ளன. எனினும் அவை குறித்த விசா­ர­ணைகள் எவையும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் இடம்­பெ­றவோ, அச்­சட்­டத்தின் கீழ் வழக்குத் தொடுக்­கப்­ப­டவோ இல்லை.

அதன்­படி இது அர­சி­ய­ல­மைப்பின் 12(1) மற்றும் 12 (2) ஆகிய உறுப்­பு­ரை­களின் கீழ் பாகு­பாடு, சட்­டத்தின் முன் சமத்­து­வ­மின்மை மற்றும் சட்­டத்தின் சம­மற்ற பாது­காப்பு தொடர்பில் தெளி­வு­ப­டுத்­து­கி­றது.. பிர­தி­வா­தி­களின் உரி­மை­களை மறுக்க அனு­ம­திக்க இந்த நீதி­மன்றம் உடன்­பட வேண்­டி­ய­தில்லை. அர­சி­ய­ல­மைப்பின் 4 ஆவது உறுப்­புரை ஊடாக இந்த நீதி­மன்றம் குடி­மக்­களின் உரி­மை­க­ளுக்கு மதிப்­ப­ளிக்க , பாது­காக்க மற்றும் அதனை தூண்ட பிணைந்­துள்­ளது.

இந்த பிர­தி­வா­திகள் 3 வரு­டங்­க­ளாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலையில், ஒரு­வ­ருக்கு கூட சம்­ப­வத்தை நேரில் கண்­ட­தாக ஒரு சாட்சி கூட இல்லை. ‘ என வாதிட்டார்.
இதன்­போது வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜ­ரா­கிய சிரேஷ்ட அரச சட்­ட­வாதி வசந்த பெரேரா, இது, பல நாட்­க­ளாக நாட்டின் பல பகு­தி­களில் சதி செய்­த­மை­யுடன் தொடர்­பு­பட்ட ஒரு வழக்கு எனவும் வழக்கு விசா­ர­ணைக்கு திகதி குறிக்­கப்­பட்­டுள்ள நிலையில் பிணை கோரிக்­கையை எதிர்ப்­ப­தா­கவும் தெரி­வித்தார்.
இதன்­போது 3,4,14 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக மன்றில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி சஷிக பெரேரா குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள சில விட­யங்கள் குற்­ற­வியல் சட்டக் கோவையின் விதி­வி­தா­னங்­க­ளுக்கு மாற்­ற­மா­னது என அடிப்­படை ஆட்­சே­பனை ஒன்­றி­னையும் இதன்­போது முன் வைத்தார். அதனால் இந்த குற்றப் பத்­தி­ரி­கையை முன் கொண்டு செல்ல முடி­யாது என அவர் வாதிட்டார்.

இந் நிலையில் இது தொடர்பில் நீதி­மன்றின் தீர்­மானம் எதிர்­வரும் 2022 பெப்­ர­வரி மாதம் 23 அம் திகதி அளிக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டது.

வழக்குத் தொடுநர் சார்பில் இந்த வழக்கில், அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி வசந்த பெரேரா தலை­மையில், சட்­ட­வா­தி­க­ளான ஹரீந்ர ஜய­சிங்க, உதார கரு­ணா­தி­லக, சஜின் பண்­டார ஆகியோர் ஆஜ­ரா­கினர்.

1,2,5,12,13,16 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர் தலை­மையில் சட்­டத்­த­ர­ணி­க­ளான எம்.சி.எம். முனீர், எம்.ஐ.எம். நளீம், ரிஸ்வான் உவைஸ் உள்­ளிட்டோர் ஆஜ­ரா­கினர்.

3,4,14 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக சட்­டத்­த­ரணி முபீ­னுடன் சட்­டத்­த­ரணி சஷிக பெரேரா ஆஜ­ரானார்.

15 ஆம் பிர­தி­வா­திக்­காக சட்­டத்­த­ரணி சம்பத் ஹேவா­பத்­தி­ர­ணவும் சட்­டத்­த­ரணி அவ்­தானும் ஆஜ­ரா­கினர். 9 ஆம் பிர­தி­வா­திக்கு சட்­டத்­த­ரணி துஷாரி வரா­பிட்­டி­ய­வுடன் சட்­டத்­த­ரணி கஸ்­ஸாலி ஹுசைன் ஆஜ­ரானார். 6,7,8,10 மற்றும் 11 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக சட்­டத்­த­ரணி எம். இம்­தி­யா­சுடன் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் ஆஜ­ரா­கினார்.
இத­னை­ய­டுத்து வழக்கின் சாட்சி விசா­ர­ணை­களை எதிர்­வரும் 2022 பெப்­ர­வரி மாதம் 23 ஆம் திக­தியும் மார்ச் மாதம் 2,10,22,31 ஆம் திக­தி­க­ளிலும் முன்­னெ­டுக்க நீதி­மன்றம் திகதி குறித்­தது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழும், பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு நிதி அளித்­தலை தடுப்­பது தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­காப்­பாட்டு சட்­டத்தின் கீழும் 21 குற்­றச்­சாட்­டுக்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இவ்­வ­ழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இரு சமூ­கங்­க­ளி­டையே மோதலை உரு­வாக்க சதித் திட்டம் தீட்­டி­யமை, 5 புத்தர் சிலை­களை தகர்த்­தமை, சமூ­கங்­கை­டையே வெறுப்­பு­ணர்­வு­களை தூண்­டி­யமை, தோப்பூர் மாவ­னெல்லை, ஹம்­பாந்­தோட்டை மற்றும் நுவ­ரெ­லியா பகு­தியில் அதற்­கான வதி­விட கருத்த­ரங்­குகள் மற்றும் ஆயுதப் பயிற்­சி­யினைப் பெற்­றமை தொடர்பில் பய­ங்கர­வாத தடை சட்­டத்தின் கீழும், ஆயுதப் பயிற்சி மற்றும் கருத்­த­ரங்­கு­க­ளுக்கு தேவை­யா­ன­வற்றை நேர­டி­யா­கவும் மறை­மு­க­மாகவும் வழங்­கி­யமை தொடர்பில் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு நிதி­ய­ளிப்­பதை தடுக்கும் சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழும் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

2019 ஏப்ரல் 21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை நடாத்­திய பயங்­க­ர­வாதி சஹ்ரான் மற்றும் முறைப்­பாட்­டாளர் அறி­யா­த­வர்­க­ளுடன் இணைந்து பிர­தி­வா­திகள் இக்­குற்­றத்தை புரிந்­துள்­ள­தாக சட்ட மா அதிபர் குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.

இக்­குற்­றச்­சாட்­டுக்­களை உறுதி செய்ய 49 தடயப் பொருட்­க­ளையும், 92 சாட்­சி­யா­ளர்­களின் பட்­டி­ய­லையும் சட்ட மா அதிபர் குற்றப் பத்­தி­ரி­கையில் இணைத்­துள்ளார்.
மொஹம்மட் அல்பர் மொஹம்மட் அஸ்பாக், மொஹம்மட் பைசர் மொஹம்மட் முப்தி, மொஹம்மட் அக்பர் மொஹம்மட் முனீப், மொஹம்மட் சுபியான் மொஹம்மட் இர்ஷாத், மொஹம்மட் அஸ்ஹர் அதீக் அஹமட், நஜிமுதீன் மொஹம்மட் பெளசான், ரஷீத் மொஹம்மட் இப்ராஹீம் அல்லது இப்ராஹீம் மெளலவி அல்லது இப்ராஹீம் சேர், அபூ செய்த் எனும் மொஹம்மட் இப்ராஹீம் நெளபர் மெளலவி, அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி, அபூ பலாஹ் எனப்படும் மொஹம்மட் இம்ராஹீம் சாஹித் அப்துல் ஹக், அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ், அபூ ஹினா அல்லது சிவப்பு தாடி என அறியப்படும் மொஹம்மட் ஹனீபா சைனுல் ஆப்தீன், ஹிஸ்புல்லாஹ் கான் ஹாமித், அபூ சியா எனப்படும் ஹயாத்து மொஹம்மது அஹமது மில்ஹான், ஹாஜா மொஹிதீன், ஹனன் ஹம்சுதீன் எனும் ஹனன் ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

(எம்.எப்.எம்.பஸீர்) விடிவெள்ளி பத்திரிகை 2021-12-23

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page